Saturday, February 2, 2013

இமயம் நிகழ்ச்சி நிறுத்தம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..............
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.........

அன்புள்ள ஜித்தா மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது ஜமாத்தின் மார்க்க மற்றும் சமுதாய செயல்பாடுகள் மாநிலத்திலும், மண்டலத்திலும், கிளைகளிலும் சிறப்பாக செய்யப்பட்டுவருகின்றது. இதன் ஒரு பகுதியாக மாநில தலைமை இமயம் தொலைக்காட்சியில் மார்க்க பரப்புரை நிகழ்ச்சி நடத்தி வந்தது. இதற்க்காக மாதம் சுமார் 4,50000(நாலரை லட்சம்) ரூபாய் செலவாகி வந்தது. ஆனால் இந்தியாவில் உள்ள மின்சார பிரச்சனை காரணமாகவும், கேபிள் டி.வி ஏஜெண்ட்கள் இமயம் தொலைக்காட்சிக்கு முக்கியத்துவம் தராது நல்ல தொழில்நுட்பத்தில் ஒளிபரப்பாததாலும், அனேக மக்களை சென்றடையவில்லை. இதனால் நமக்கு கிடைத்துவந்த விளம்பரங்கள் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால் பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்டு, நாம் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தமுடியாத சூழ்நிலைக்கு ஆளானோம். அதனால் இந்நிகழ்ச்சியை 31-01-2013 அன்றுடன் நிறுத்திவிட்டு வாராவாரம் விடுமுறை நாட்களின் மெகா டி.வியில் நேரலை நிகழ்ச்சி நடத்த மாநில நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மேலும் இணையதள தொலைகாட்சி தொடங்குவது பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். இன்ஷா அல்லாஹ் விரைவில் இதற்க்கான அறிவிப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படும். 
எனவே இப்பொழுது இமயம் தொலைக்காட்சியில் நமது நிகழ்ச்சி 01-02-2013 முதல் வெளிவராது என்றும், இன்ஷா அல்லாஹ் விரைவில் மெஹா தொலைக்காட்சியில் வார நிகழ்ச்சியும், இணையதள டி.வி வர உள்ளது என்றும் நீங்கள் அறிவதுடன் நமது கொள்கை சகோதரர்களுக்கும் எத்திவைக்கவும். இந்நிகழ்ச்சிக்கு இதுவரை ஆதரவு அளித்த உங்கள் அனைவருக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

இப்படிக்கு 
ஜித்தா மண்டல நிர்வாகிகள்

No comments:

Post a Comment