Tuesday, February 26, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 வெள்ளி அன்று ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் ஜும் ஆதொழுகைக்குப்பின் வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சகோ. நிஜாம் மனிதன் சுமந்த பயணம் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் மனித நேயம் என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது ரஃபீ அவர்கள் சோதிக்கப்படும் செல்வங்கள் என்ற தலைப்பிலும் சிற்றுரையாற்றினார்கள். இதில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் உட்பட சுமார் 50 பேர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment