Wednesday, February 13, 2013

இந்திய அரசு ஹஜ் குழு விண்ணப்ப அறிவிப்பு


தமிழ்நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த, ஹஜ் 2013ல், ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லீம்களிடம் இருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்க்கிறது. ஹஜ் 2013-ற்க்கான விண்ணப்ப படிவங்களை சென்னை-34, எண் 13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 06-02-2013 முதல் பெற்றுக்கொள்ளாம். அல்லது இவ்விண்ணப்பங்களை  www.hajcommittee.com  என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும் உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதர்க்கான கடைசி தேதி 20-03-2013.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்னும் ஹஜ் கொள்கையினைச் செயற்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் இந்திய ஹஜ் மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளாத நபர்கள் மட்டும் ஹஜ் 2013-ல் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர். சுய கையொப்பம் இட்ட பாஸ்போர்ட்டின் நகல்/20-03-2013 அல்லது அதற்க்கு முன்பு வழங்கப்பட்ட மற்றும் குறைந்தது 31-03-2014 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை அசலாக விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்புமாறு புனித பயணிகள் கேட்டுக கொள்ளபடுகிறார்கள். IFS குறியீடு உள்ள இரத்து செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்படாத வங்கி காசோலையை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஹஜ் 2013 பற்றிய விபரங்களுக்கு ஹஜ் 2013-ற்கான வழிமுறைகள் கையேட்டைப்படிக்கவும். அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையத்தளம் www.hajcommittee.comஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூபாய் 300/- (முன்னூறு) ஐ மட்டும் திருப்பித்தரப்படாத பரிசீலனை கட்டணமாக (processing fee) பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் பவர் ஜோதி கணக்கு எண் 32749477270-ல் செலுத்தி அதற்க்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்க்கு 20-03-2013 க்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்புவகைப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் அவ்வகைக்கான அனைத்து வழுமுறைகள் தவறாமல் பின்பற்றுமாறும் அவ்வகையின் கீழ் பரிசீலிப்பதற்கு ஏதுவாக அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்.

வெளியீடு,
செய்தி – மக்கள் தொடர்புத் துறை – சென்னை-9.

No comments:

Post a Comment