Saturday, February 9, 2013

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-02-2013 வெள்ளி அன்று காலை 10 மணிக்கு ஜித்தா மண்டலம் தபூக் கிளையில் பேச்சு பயிற்ச்சி வகுப்பு கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் தலைமையில் கிளை செயலாளர் சகோ. நிஜாம் அவர்களால் நடத்தப்பட்டது. அனேகர்கள் கலந்துகொண்டு பயிற்ச்சி பெற்று பயனடைந்தனர்.
ஜும். ஆ தொழுகைக்குப்பின் வாராந்திர மார்க்க உரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்பதின் நற்பலன்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், சகோ. முஜாஹித் அவர்கள் சிந்தனை செய் மனமே என்ற தலைப்பிலும். சகோ. ரஃபீக் அவர்கள் சொல்வதை செய்வோம் என்ற தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். சுமார் 50ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். து.ஆ மற்றும் மதிய உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment