Sunday, September 30, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 21/09/2012  வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்  "வாழ்வியல் வசந்தம் இஸ்லாம்" என்ற தலைப்பில், இஸ்லாம் என்றால் என்னஅது நமது அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு ஊடுறுவ வேண்டும்? என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.
மேலும் கிளைச் செயலாளர் சகோநிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்என்ற தலைப்பில் கடந்த வார உலகலாவிய நிகழ்வுகள் அனைத்தையும்,  குறிப்பாக அமெரிக்காவிற்கு எதிரான உலகலாவிய முஸ்லிம்களின் எழுச்சிமிகு போராட்டங்கள், அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் TNTJ வின் கண்டன ஆர்பாட்டங்கள், முற்றுகை போராட்டங்கள் ஆகிய அனைத்து விஷயங்களையும் தொகுத்து வழங்கினார்கள்.
மேலும் கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "மூமின்களின் பண்புகள்என்ற தலைப்பில் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆ வுடன் மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 
 

No comments:

Post a Comment