Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளை  மர்கஸில் 06-09-2012 வெள்ளி அன்று  ஜூம்.ஆ விற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "மரணத்திற்குப் பின் மனிதனின் நிலை" என்ற தலைப்பில், மனிதன் மரணித்தப்பின் கப்ரில் நடக்கவிருக்கும் அனைத்து விஷயங்களையும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள்.

மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நாடும் நடப்பும்! என்ற தலைப்பில், கடந்த வார நிகழ்வுகளையும் (பி.ஜே Vs சைபுத்தீன் ரசாதி விவாத ஒப்பந்தங்கள் உள்பட) தொகுத்து வழங்கினார்கள்.

பின்பு கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள்  "மூமின்களின் பண்புகள்" என்ற தலைப்பிலும் சிற்றுரை ஆற்றினார்கள். 

இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள், ரவி உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். நபிவழி து.ஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

 

No comments:

Post a Comment