Wednesday, September 19, 2012

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர பயான் 14/09/2012 வெள்ளி அஸர் தொழுகைக்குப்பின் அன்று கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோ.அன்சாரி "அழைப்புப்பணியின் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். தொடர்ந்து கிளை துணைச்செயலாளர் சகோ. இர்ஃபான் மாநில, மண்டல மற்றும் கிளையின் ஃபித்ரா கணக்குகள் பட்டியலை வாசித்துகாட்டினார். அடுத்ததாக மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில தலைமைக்கு மண்ணடியிலேயே இடம் கிடைத்திருப்பதையும் அதற்கு தேவைப்படும் தொகை பற்றியும் விளக்கினார். தொடர்ந்து மாநில தலைமையின் அறிவிப்புகள் பற்றியும், ஜித்தா மண்டல ஒருநாள் பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் அறிவிப்பு செய்யப்பட்டது. கேம்ப் தாவா மற்றும் தனிநபர் தாவா சந்திப்பு பற்றி முடுக்கிவிட ஆலோசனை செய்யப்பட்டது. ஆர்வுமுடன் பலரும் கலந்துகொண்டு பயன் பெற்றனர். துஆவுடன் நிறைவுற்றது. 

No comments:

Post a Comment