Sunday, September 2, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில்

31-08-2012 வெள்ளி அன்று ஜூம்.ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "மரணமும் மண்ணறை வாழ்கையும்"  என்ற தலைப்பில்,  மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கத்தை விளங்கி அதை முழுமையாக கடைபிடிக்கதக்க வகையில் மிகத்தெளிவாக குர்ஆன், ஹதீஸ்ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்கள். மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் நாட்டு நடப்பும் நமது நிலையும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ.  முஜாஹீத் அவர்கள்  இறையச்சம் என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாக சிற்றுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில்  பிறமத சகோதரர்கள் உள்பட 45 ற்கும் அதிக சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். து.ஆவுடன் மதிய உணவிற்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

 

No comments:

Post a Comment