Sunday, September 9, 2012

TNTJ ஜித்தா தபூக் கிளையில் இஸ்லாத்தைத் தழுவிய சகோ. இரவி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தா மண்டலம்  தபூக் கிளையில் கடந்த 06-09-2012 வியாழன் அன்று  தபூக் AL AFARI POLY CLINICல் கிளை துணைச்செயலாளர் சகோஉமர் மாலீக் அவர்களுடன் பணி புரியும்  விருதாச்சலம்-காட்டூரைச் சேர்ந்த  சகோதரர் இரவி அவர்கள் TNTJ தபூக் கிளை மர்கஸில் சத்திய மார்க்கம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.  அல்ஹம்துலில்லாஹ்.

 

இவருக்கு கிளைத் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் இஸ்லாத்தின் இறை கோட்பாடு, வணக்க, வழிபாடுகள் மற்றும் கலீமாவின் விளக்கத்தையும் எடுத்து கூறி, கலீமாவை சொல்லி கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். மேலும் அவர் தனது பெயரை முஹம்மது ரபீக் என்றும் மாற்றிக்கொண்டார். அவருக்கு சகோ. P.J அவர்களின் தமிழாக்கம்திருமறை தோற்றுவாய்மாமனிதர் நபிகள் நாயகம்வருமுன் உரைத்த இஸ்லாம்மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்பட வில்லை, நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம்கிருஸ்தவருடன் நடந்த விவாதம்பைபில் இறை வேதமாகுர்ஆன் இறை வேதமா? விவாதம், இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள் ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ். 

"அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழையும் போது உமது இறைவனை போற்றி, துதிப்பீராக, பாவமன்னிப்பு தேடுவீராக!! (திருக்குர்ஆன் – 110:2,3]

 

No comments:

Post a Comment