Wednesday, January 2, 2013

TNTJ ஜித்தா-தபூக் மனிதநேய பணி

தபூக்-NAPCO கம்பெனியில் பணிபுரியும் கடலூர் மாவட்டம் லால்பேட்டையைச் சேர்ந்த சகோ. இக்பால் அவர்களின் மனைவி சலீமாபானு(42) அவர்கள் 28-12-2012 வெள்ளியன்று வஃபாத்தாகி விட்டார்கள், என்ற செய்தி TNTJ ஜித்தா மண்டலம் தபூக் கிளை நிர்வாகிகளுக்கு  கிடைத்தது. உடனடியாக கிளை நிர்வாகிகள், மரணித்த-சலீமாபாணு அவர்களின் உடலை தபூக்கில் அடக்கம் செய்வதற்கான அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தினர். இதற்க்கான இந்திய தூதரக, சௌதி உள்துறை அமைச்சக நடைமுறை பணிகளை ஜித்தா மண்டல நிர்வாகிகள் ஜித்தாவில் இறந்தவரின் மகனை கொண்டு உடனடியாக ஏற்பாடு செய்தனர். அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து பணிகளும் முடிந்து கடந்த 01-12-2013 செவ்வாய் அன்று தபூக் பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிந்து கபுர் மற்றும் மறுமை உலகில் வெற்றியை அளிக்க து.ஆ செய்வோம்.

No comments:

Post a Comment