Wednesday, February 15, 2012

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய உதவிய TNTJ ஜித்தா

கடந்த 23-01-2012 திங்கள் அன்று பண்ருட்டியை சேர்ந்த சகோ. அப்பாஸ் அவர்கள், ஜித்தா மண்டல நிர்வாகிகளான சகோ. முனாப் மற்று, சகோ.சலாஹுதீனை தொடர்பு கொண்டு, 20-01-2012 அன்று உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் உறவினரான பண்ருட்டியை சேர்ந்த சுலைமான் அவர்கள் இன்று இறந்துவிட்டதாகவும், ஜனாஸாவை அடக்கம் செய்வதற்க்கான அரசு வழிமுறைகளை அறிவுறுத்துமாறும் கேட்டுள்ளார்கள். உடன் அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை கூறி துணை தூதரகத்தின் மூலம் விரைந்து அந்த பணிகள் முடிய தக்க நடவடிக்கை எடுத்து மறுநாளே அடக்கம் செய்ய துணை புரிந்த்துள்ளார்கள். 24-01-2012 செவ்வாய் அன்று அடக்கம் செய்யப்பட்டது அதில் நம் நிர்வாகிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment