Monday, February 27, 2012

இருதய அறுவை சிகிச்சைக்காக அவசர ரத்ததானம்

கடந்த 18ம் தேதி அன்று நெஞ்சுவலி காரணமாக ஜித்தாவிலுள்ள கிங் ஃபஹத் மருத்துவமையில் சேர்க்கப்பட்ட நெல்லை மாவட்டம் மூளைக்காரன் பட்டியை சேர்ந்த சகோ. அஹமது கபீர் ராவுத்தருக்கு மருத்துவர்களின் பரிசோதனைக்குப்பின் இதயகுழாயில் இரண்டு அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும் அதற்க்கு குறைந்தது 8 யூனிட் ரத்தம் தேவைப்படும் என்று சொன்னார்களாம், TNTJ ரத்ததான முகாமை அறிந்த அஹமது கபீர் நமது ரத்ததான பொறுப்பாளர் சகோ. சலாவுதீனை அணுகி உள்ளார். உடன் சகோ. சலாவுதீன் 8 பேர்களை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார்கள். ஆனால் அதில் 5 பேரிடம் இருந்துதான் ரத்தம் பெற முடிந்தது, உடன் சலாவுதீன் ரத்த வங்கியில் நமக்குள்ள பழக்கத்தை வைத்து உடன் ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். இன்ஷா அல்லாஹ் 27-02 அன்று அறுவை சிகிச்சை நடபெற உள்ளது. அவரின் உடல்நலம் வேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து.ஆ செய்வோம்

No comments:

Post a Comment