Saturday, December 3, 2011

ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் தனிநபர் மற்றும் கேம்ப் சென்று தாஃவா பணிகள்.


அல்லாஹ்வின் அருட்கிருபையால்2.12.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் தனிநபர் மற்றும் கேம்ப் சென்று கடையநல்லூர் சகோதரர்களை சந்திப்பு கடந்த வாரம் திட்டமிட்டபடி நடந்தது. இதில் செயலாளர் சகோ.ஹனீபா மற்றும் பொருளாளர் அல் அமீன் மற்றும் இரு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார். சில சகோதரர்களை சந்தித்து ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லி, இதற்காக நமது ஜமாஅத் எந்த அளவு செயல்படுகிறது என்றும், அதுமட்டுமல்லாமல் சமுதாயப்பணிகளையும் மறுமையின் நன்மையை நாடிசெய்வதையும் எடுத்துக் கூறப்பட்டது. அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் தரப்பட்டது. உணர்வு இதழ்களும், தவறான வாதங்களும் தக்க பதில்களும் ஐந்து டிவிடி அடங்கிய ஒருசெட் மற்றும் SSU – வின் திருகு தாளங்கள்(அப்துல் நாஸர், அப்துல் ரஹ்மான் விளக்கம்)குறுந்தகடுகளும், TNTJ -2012 காலண்டரும் இலவசமாக கொடுக்கப்பட்டது. அதில் நான்கு பேர் தங்களையும் இந்த செயல்பாடில் பங்குபெறச் செய்யுமாறும், உறுப்பினராக சேர்த்துக் கொள்ளுமாறும். கேட்டுக் கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.

























No comments:

Post a Comment