Sunday, December 11, 2011

ஜித்தாமண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்.


அல்லாஹ்வின் பேரருளால் 09.12.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் மாதாந்திர கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது.

 

இதில் மண்டல து.தலைவர் சகோ.ரஃபீக் அவர்கள் நாவைப் பேணுதல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் நாவினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் மற்றும் நாவைப்பேணுதல் பற்றி நமது மார்க்கம் எந்த அளவு வலியுறுத்துகிறது என்பதையும், அதிலிருந்து விலகுவது எப்படி என்பதையும் குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் விளக்கினார்கள். தொடர்ந்து நமது ஜமாஅத்தின் செயல்பாடுகள், மற்றும் மாதாந்திர கூட்டங்களுக்கு வராத உறுப்பினர்களை நேரில் சென்று சந்திக்க முடிவு செய்யப்பட்டது. மதீனா பயணம், தர்ஃபியா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. மாதாமாதம் வழக்கமாக வழங்கப்படும் நபர் ஒன்று 1000 ரியால் வீதம் இருவருக்கு வட்டியில்லா கடனும் வழங்கப்பட்டது. ஆவலுடன் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். துஃஆவுடன் நிறைவுற்றது.


No comments:

Post a Comment