Saturday, December 10, 2011

ஜித்தா-தபூக் ஆஷ்ட்ரா பண்ணை பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 08-12-2011 வியாழன் அன்று மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா மண்டலம் தபூக் கிளை, ஆஷ்ட்ரா விவசாய பண்ணையில் மார்க்க சொற்பொழிவினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் கிளை தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் நபி வழியில் உம்ரா செய்வது பற்றி விரிவாக விளக்கினார்கள். இந்நிகழ்ச்சியிம் போது புதிதாக இஸ்லாத்தில் இணைந்த 2 பிலிப்பைன் நாட்டு சகோதரர்கள் கலந்து கொண்டு, தாங்கள் தூய இஸ்லாத்தில் இணைந்த விபரத்தை விளக்கினார்கள். நபி வழியில் உம்ரா புத்தகம் 5 பேர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 15 பேர்கள் கலந்துகொண்டு பயனடந்தனர். து.ஆ விற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment