Saturday, December 17, 2011

ஜித்தா மண்டல செயற்குழு

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

வல்ல நாயனின் கிருபையால் கடந்த 15-12-2011 வியாழன் அன்று இரவு 8.30 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-ஜித்தா மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் சகோ.நௌஷாத் தலைமையில் நடைபெற்றது.  அதில் நிர்வாக ரீதியான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. மாநில பொதுக்குழு பற்றியும், அதன் தீர்மானங்கள் பற்றியும் உறுப்பினர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரும் 05-01-2012 மதினா பயணம் நடத்துவது சம்பந்தமாகவும், 12-01-12 அன்று மண்டல பொதுக்குழு நடத்துவது பற்றியும், பிப்ரவரி மாதம் மண்டல தர்பியா முகாம் நடத்துவது பற்றியும், பிப்ரவரி இறுதியில் மக்கா பயணம் பற்றியும், தாவா பணிகளை அதிகரிப்பது பற்றியும் கலந்தாலோசனை செய்யப்பட்டது. மண்டல துணை செயலாளர் சகோ. சலாவுதீன் சகோ. அனஸின் மறைந்த தந்தைக்கான இன்ஸ்யூரன்ஸ் தொகை பெறுவதற்க்காக மண்டலம் நடத்தி வரும் வழக்கு பற்றியும் விவாரித்தார்கள். இதில் செயற்குழு உறுப்பினார்கள் கலந்து கொண்டனர். துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.






No comments:

Post a Comment