Friday, December 16, 2011

ஸஃபர் மாதம் பீடை மாதமா?

இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள் செயல்பாடுகளால் இஸ்லாத்தைப்பற்றி மற்றமக்களிடம் தவறானஎண்ணத்தைத் தோற்று வித்து விட்டனர். குறிப்பாக சகுனம்,ஜோதிடம்,நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறுஎந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடைசெய்துள்ளது ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக்காரியங்களை முஸ்லிகளே பால்கிதாபு,மோர் கிதாபு [!] பார்வை பார்த்தல் என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்இதுபோன்று இஸ்லாத்திற்கு முரணாக முஸ்லிம்கள்செய்யும் காரியங்களில் ஒன்றுதான் ஹிஜ்ரிஆண்டின் இரண்டாவதுமாதமாக வருகின்ற ஸFபர் மாதத்தைப்பீடைமாதம் என்று கருதுவதாகும். இன்று முஸ்லிம்கள் ஸFபர் மாதத்தைப்பீடை மாதமாகக் கருதுகின்றனர். இந்த மாதத்தில் பீடையைக்கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்கு சென்று மூழ்கி வருகிறார்கள். மேலும்பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றனர், ஸFபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்து பீடையை நீக்குகின்றனர்.        இன்னும்சிலர் மாவிலைகளில்சலாமுன் கவ்லம் மிர்ரப்பிர்ரஹீம்என்ற திருக்குர்ஆனின் வசனத்தைஎழுதி அதனை நீரில்கரைத்துக்குடிப்பார்கள். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்டதுன்பம் நீங்கும்என்று கருதுகிறார்கள். மேலும் சிலஇடங்களில் பிரத்தியோகமாக பீடையைப்போக்குவதற்காகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின் [?] தலையில் கொட்டுவார்கள்.    
                                                
இதுபோன்று ஏராளமான மூடநம்பிக்கைகளை மாற்று மதத்திலிருந்து அப்படியே  காப்பி அடித்துள்ளார்கள். மேலும் ஸFபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களை தள்ளிவைத்து விடுவதையும் கூட பார்க்கமுடிகிறது.                                    இன்று ஸFபர் மாதம் பீடைமாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில் ஷவ்வால், சபர்மாதமும் பீடையாக கருதப்பட்டது. பீடைமாதம் கிடையாதுஎன்பதை உணர் த்தும் வண்ணமாக தன்னை நபி [ஸல்] அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள், அம்மாதத்தில்தான் உடலுறவும் கொண்டார்கள்என்று அண்ணை ஆய்ஷா [ரலி] அவர்கள் அறிவிக்கின்றார்கள் [நூல்-முஸ்லிம்; 2782]


ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் சபர் மாதத்தை பீடை மாதமாகக்கருதினார்கள் இதற்காகதான் நபி[ஸல்]அவர்கள் Fபர் என்பது நீங்கள் நினைப்பது போல் பீடை இல்லை என்று கூறினார்கள் [நூல்;அபூதாவூத்-2414]                                             ஸFபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக சபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக்கூடாது என்று தான் உள்ளது. தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸபர் என்பதும் கிடையாது என்று நபி [ஸல்அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்;அபூஹுரைரா[ரலி] நூல்:புகாரி-5707,5717.   


Fபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர்.இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி[ஸல்அவர்கள் Fபர் என்பது இல்லைஎன்று கூறினார்கள்.                                                                                               

நல்ல நாள் கெட்ட நாள என்ற ஒன்று உண்டா?
                                                                                    
காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்! உலகில் ஏற்படும்   விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர, நாட்களைப் பொருத்து அல்ல.                                                                                              எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லைஎல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை. உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.                                                                          அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூருவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.                                                      ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கிறான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகிறான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்என்று அல்லாஹ் கூறுவதாக நபி [ஸல்] அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்;அபூஹுரைரா[ரலி] நூல்:புகாரி- 4826. 


என்வே நாட்களை நாம் தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.                                             


மேலும் நபி[ஸல்] அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி[ஸல்] அவர்கள் தன்னை பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல்மிதிப்பதற்- கோ சென்றார்களா என்றால் இல்லை.  


பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வரவேண்டிய துன்பம் வந்தேத் தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இதோ-முடிவுரையாக அல்லாஹ்வின் அழகிய அரிவுரை:   “அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத்தவிர அதை நீக்கு பவன் வேறு யாருமில்லை.  


ஒருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடினால் அவனது அதை தடுப்பவன் யாரும் கிடையாது.  தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். 
அவனே மன்னிப்பவன் : அளவற்ற அருளாலன், நிகரற்ற அன்புடையோன்.

No comments:

Post a Comment