Thursday, May 1, 2014

ஜித்தாவில் தமிழ் சகோதரர் இஸ்லாத்தை ஏற்றார் - 30.04.2014

அஸ்ஸலாமு அலைக்கும்,

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டப்படி, ஜித்தா மண்டலம் கிலோ 7 ல் இருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சகோ. செந்தில்குமார் இஸ்லாம் மார்க்கத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஹமது ரபிக் என்று மாற்றிக்கொண்டார்.

மண்டல நிர்வாகிகள் நேற்று 30/4/2014 அவரை சந்தித்து இஸ்லாமை இப்பொழுதுள்ள வாழ்க்கை நடைமுறைப்படி எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி விளக்கமளித்து தமிழ் குரான் மற்றும் புத்தகங்கள் வழங்கினர்.
ஊரில் உள்ள அவரது மனைவியையும் குழந்தைகளையும் இஸ்லாத்தின் பக்கம் அழைக்க முயற்சிப்பதாக கூறினார். அவருக்காக அல்லாஹ்விடம் துஆ செய்யவும்.





No comments:

Post a Comment