Monday, January 30, 2012

TNTJ-ஜித்தா கடையநல்லூர் கூட்டமைப்பு பொதுக்குழு போட்டோ


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.01.2012 அன்று இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாவாழ்- கடையநல்லூர் சகோதரர்களின் கூட்டமைப்பின் பொதுக்குழு மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் அவர்கள் தலைமையில் மண்டல துணைசெயலாளர் சகோ.கவுஸ் முஹம்மது மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. கிளைத்தலைவர் சகோ.அப்துல் காதர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துவக்கவுரை பொருளார் சகோ. அமீன் செய்தார். தொடர்ந்து மண்டல துணைத்தலைவர் சகோ.ரஃபீக் "அழைப்பு பணியின் பயன் என்ன" என்ற தலைப்பில் சொர்பொழிவு நிகழ்த்தினார். தனது உரையின் அழைப்புப்பணியின் அவசியத்தையும் மிக தெளிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து செயலாளர் சகோ.ஹனீஃபா தாயகம் செல்வதால் புதிய செயலாளராக சகோ.கும்மாளி அப்துல் பாசித் போட்டியின்றி மண்டல துணைத்தலைவரால் தேர்வு செய்யப்பட்டார். இதில் கூட்டமைப்பின் பொருளாளர் சகோ. அமீன் கணக்குகளை சமர்ப்பித்தார்.புரொஜக்டர் மூலம் கணக்குகளும், உறுப்பினர்கள் சந்தா விபரமும் அகன்ற திரையில் காட்டப்பட்டது. செயலாளர் ஹனீஃபா கூட்டமைப்பின் கடந்த வருட செயல்பாடுகளை விளக்கினார். சகோ.அப்துல் பாசித் கடையநல்லூரின் கிளைகள் செய்து கொண்டிருக்கும் செயல்பாடுகளை விளக்கினார். சகோ. அமீன் அந்த கிளைகளின் செயல்பாடுகளை அகன்ற திரையில் புகைப்படங்களுடன் விளக்கினார். துணைத்தலைவர் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் டவுண்கிளையிலிருந்து வந்த கடிதத்தை படித்துக்காட்டினார். அனைத்து மாவட்டங்களிலும் நடத்த இருக்கும் போராட்டம் பற்றி விளக்கப்பட்டது. இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அதிகமான உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். நிர்வாகிகள் நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தனர். துஆ வுடன் கூட்டம் நிறைவுற்றது. 

No comments:

Post a Comment