Monday, January 16, 2012

TNTJ ஜித்தா-செனைய்யா கிளை பொதுக்குழு

அல்லாவின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளை பொதுக்குழு 13.01.2012 அன்று வெள்ளி மாலை ஜித்தாமண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி தலைமையில், துணைசெயலாளர் முஹம்மது கபீர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் கிளைச் செயலாளர் சகோ.யாகூப் தொகுத்து வழங்கினார். கிளைத்தலைவர் சகோ.அல் அமீன் கிளையின் கடந்த வருட செயல்பாடுகள் மற்றும் தொடங்கிய வருடத்தின் சில செயல் திட்டங்களையும் விளக்கினார். தொடர்ந்து தமிழகத்தில் மாநில தலைமையின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கான மாணவர் ஸ்பான்ஸர் கணக்குகள் சமர்பித்தார். கிளை தற்காலிய பொருளாளர் சகோ. அப்துல் காதர் கிளைக்கணக்குகளை சமர்பித்தார். வட்டியில்லா கடன் உதவித்திட்டத்தின் கணக்குகளை அதன் பொருப்பாளர் சகோ.அப்துல் ஹலீம் சித்தீக் சமர்பித்தார். ஜித்தா மண்டல பொதுச்செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில தலைமைக்கு இடம் வாங்கும் விபரத்தை விளக்கினார்கள் அதற்கு பல உறுப்பினர்கள் நன்கொடை எழுதினார்கள், தர்ஃபியா நடத்த இருக்கும் தகவலையும் விளக்கினார்கள். உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment