Thursday, January 12, 2012

ஜித்தா-மதீனா கிளை நிர்வாக கூட்டம்

அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 05-1-2012 வெள்ளி அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதினா கிளையில் நிர்வாக கூட்டம் மண்டல செயலாளர் சகோ. அப்துல் பாரி அவர்களின் தலைமையிலும், மண்டல் பொருளாளர் சகோ.யூனுஸ் முன்னிலையிலும் நடந்தது. இதில் வரும் நாட்களில் செயல்பாடுகளை எப்படி அமைத்துக்கொள்வதென்று விரிவாக விவாதிக்கப்பட்டது. சகோ.பாரி அவரகள் மண்டலத்தின் மற்ற கிளைகளின் செயல்பாடுகளை விளக்கி மதீனா கிளை செயல்பாட்டை எப்படி விரிவாக்கம் செய்வது என்று ஆலோசனைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து உஹது போர் தந்த படிப்பினை எனும் தலைப்பில் சகோ. அன்சாரி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment