Saturday, September 28, 2013

இரத்த தான முகாம் -27.09.2013


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-09-2013 அன்று ஜித்தா மண்டலம் சார்பில் கிங் பஹத் மருத்துவமனையில் ஹாஜிகள் பயனுறும் வகையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அதில் சுமார் 115க்கும் மேற்பட்ட சகோதரா்கள் இரத்த கொடை அளித்தனர். அனைத்து சகோதரா்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். மருத்துவமனை நிர்வாகம் மதிய உணவு மற்றும் இரத்த தானம் செய்வோருக்கும் பரிசு பொருட்கள் ஆகியவற்றை வழங்கின. மருத்துவமனையில் பணிபுரியும் சகோ. சாதிக் மற்றும் சகோ. மைதீன் அவா்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த முகாமில் கலந்து கொண்டவருக்கு சென்ற வருடம் போல் இந்த முறையும் சான்றிதழ் வழங்க மருத்துவமனை நிர்வாகம் உறுதியளித்தது. அனைத்து சகோதரா்கள், நிர்வாகிகள் நல் ஒத்துழைப்பு நல்கினர். அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு 
ஜித்தா மண்டல நிர்வாகிகள்
ஜித்தா மண்டலம்.

No comments:

Post a Comment