Monday, September 9, 2013

திருச்சியில் கூடிய மாநில செயற்குழு

செய்தி வெளியிடப்பட்ட நாள் Monday, August 26, 2013, 11:52

1236933_646820365336981_588457071_nசென்னை – திருச்சி – நெல்லை – கோவை ஆகிய நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் 2014 ஜனவரி 28 அன்று போராட்டத்தை நடத்துவது என நேற்று (25.08.13 – ஞாயிறு) காலை திருச்சியில் கூடிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு தீர்மானங்கள்:

மாநில செயற்குழு தீர்மானங்கள்

2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஞாயிறு அன்று திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. சிறைநிரப்பும்போராட்டம் :

இடஒதுக்கீட்டுக்கானபோராட்டம்

தமிழகத்தில்முஸ்லிம்களுக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத்தருவோம் என்றும் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு பத்துசதவிகிதம் தனியாக இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ராக மிஷன் பரிந்துரையை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று சென்னை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய தமிழகத்தின் நான்கு பெருநகரங்களில் மாபெரும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது என இந்தசெயற்குழு தீர்மானிக்கிறது.

புதுவை மாநிலத்தில்  முஸ்லிம்களுக்கு 6 சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிப்பதாக புதுவை சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அதே 2014 ஜனவரி 28 செவ்வாய்க் கிழமை அன்று பாண்டிச்சேரியிலும் சிறைநிரப்பும் போராட்டம் நடத்துவது எனவும் இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

ஆண்கள் மட்டுமின்றி இலட்சக்கணக்கான முஸ்லிம் பெண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் எனவும் இச்செயற்குழு அறிவிக்கிறது.

2. ஊடகங்களின்பாரபட்சப்போக்கு

விஸ்வரூபம் என்ற திரைப்படம் முஸ்லிம்களின் மதநம்பிக்கையையும் இஸ்லாத்தையும் இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டதால் முஸ்லிம்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சனையின் போது அனைத்து ஊடகங்களும் அதிகமான தலைவர்களும் முஸ்லிம்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து இழிவுபடுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டனர். சென்சார்போர்டு அனுமதி அளித்த பின் யாரும் தடுக்கக்கூடாது என்று சட்டம் பேசினார்கள்.மனிவண்ணன்,சீமான் தவிர அனைத்து சினிமாக்காரர்களும் முஸ்லிம்களுக்கு எதிராகக்களம் இறங்கினார்கள்.ஆனால் மெட்ராஸ்கபே என்ற திரைப்படம் விடுதலைபுப்புலிகளை பயங்கரவாதிகளாகச்சித்தரித்துள்ளதால் அந்தப்படம் தமிழகத்தில் வெளியிடப்படவில்லை. விஸ்வரூபம் படம் விஷயத்தில் வரிந்து கட்டிய ஊடகங்களும் தலைவர்களும் இன்று வாய் மூடிமவுனமாக உள்ளனர்.ஊடகங்களும் அரசியல் தலைவர்களும் முஸ்லிம்கள் விஷயத்தில் நியாயமற்ற முறையிலும் துவேஷத்துடனும் நடப்பது இதில் இருந்து உறுதியாகிறது .ஊடகங்கள், அரசியல்வாதிகள், மற்றும் சினிமாக்காரர்களின் இந்த மதவெறிப்போக்கை இந்த செயற்குழு கடுமையாகக்கண்டிக்கிறது..

இந்துத்துவா இயக்கத்தினர் கொல்லப்படும் போதெல்லாம் உடனடியாக அந்தப்பழியை முஸ்லிம்கள் மீது போட்டு ஊடகங்கள் விஷமப்பிரச்சாரம் செய்து முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிரான கசப்புணர்வை விதைத்து வருகின்றன. கட்டப்பஞ்சாயத்து, பெண்தொடர்பு, ரியல்எஸ்டேட், கடன்தகராறு, நிலத்தகராறு, குடும்பத்தகராறு, சொந்தப்பகை அரசியல் பகை என பல காரணங்களால் கொலை நடந்திருக்கலாம்.இது குறித்து தகுந்த துப்பும் தடயமும் கிடைக்கும் போதுதான் விபரம் தெரியவரும். அதுவரை கற்பனைகளை எழுதி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கவேண்டாம் என ஊடகங்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது..

மாலேகான் குண்டுவெடிப்பு, சம்ஜோதாரயில் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்கள் மீது முதலில் பழி போடப்பட்டு பின்னர் இந்துத்துவாவினர்தான் அவைகளைச் செய்தனர் என்று கண்டுபிடிக்கப்பட்டதையும், கர்நாடாகா பீஜப்பூரில் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோட்டதும், பெங்களூர் ஹனுமான்கோவிலுக்குள் மாட்டுக்கறியைவீசி முஸ்லிம்கள்மீது பழிபோடதிட்டம் தீடியதும் இந்துத்துவாவினர்தான் என்பதும், நெல்லை தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவைத்ததும், திருப்பூர் அருகே சதுமுகை என்ற ஊரில் விநாயகர் சிலைக்கு செருப்பு மாலை போட்டதும், நெல்லையில் கோவில் தேருக்கு தீவைத்ததும் இந்துத்துவாவினர்தான் என்பது விசாரணைக்குப் பிறகு அம்பலமானதையும் இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

3. குற்றங்கள் குறைய

நாட்டில் கற்பழிப்புகளும் குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.மென்மையான தண்டனைகளும் பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்து தீர்ப்பு வழங்கப்படுவதும் தான் இதற்குகாரணமாக உள்ளன.

சட்டம் ஒழுங்கைக் காப்பதுதான் அரசாங்கத்தின் முதல் கடமை என்பதை உணர்ந்து எந்த வழக்காக இருந்தாலும் ஐம்பது நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் வகையில் நீதிமன்றங்களையும்,நீதிபதிகளையும் அதிகரிக்க வேண்டும் எனவும், நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கான எல்லா காரணங்களையும் களைய வேண்டும் எனவும் இந்த செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

பாலியல் வன்முறைக்கு காரணமான அனைத்து ஆபாசங்களுக்கும் முற்றாக தடை விதிக்கவேண்டும் எனவும் இந்தசெயற்குழு வலியுறுத்துகிறது.

குற்றங்களுக்கு கடுமையான தண்டணைகள் வழங்கவேண்டும் எனவும் இந்தியாவில் மரண தண்டனையை எக்காரணம் கொண்டும் நீக்கக்கூடாது எனவும் இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

4. சிறைச்சாலைகளைமூடவேண்டும்

விசாரணைக் கைதிகளை பல ஆண்டுகள் சிறையில் அடைத்து வைப்பதால் அவர்களின் குற்றம் நிரூபணமாவதற்கு முன்னால் தண்டனை வழங்குவதாக அமைகின்றது.மேலும் சிறைச்சாலைகளின் செலவுக்காக மக்களின் வரிப்பணம் பாழாகிறது. காவலர்களின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக விசாரணைக் கைதிகளைச்சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மின்னணுவளையம் பொருத்தி அவர்கள் தமது ஊரை விட்டு அல்லது பகுதியை விட்டு வெளியேறாதவாறு கண்காணிப்பது என்ற முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.இதனால் குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் அடுத்த குற்றங்களைச் செய்வதற்கான திட்டங்கள் வகுக்கமுடியாது. அரசுக்குச் செலவுகள் ஏற்படாது. மேலும் அவர்கள் குடும்பத்துடன் இருப்பதற்கும் உழைத்து சம்பாதிப்பதற்கும் இது உதவியாக அமையும்.

தங்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசினால் கண்காணிக்கப்படுவதால் அவர்கள் மேலும் குற்றங்கள் செய்யாமல் தம்மைத் தடுத்துக் கொள்வார்கள்.

15 நாட்களுக்கு ஒரு முறை நீதிமன்றங்களுக்கு அழைத்து வரும் செலவுகளும் சிரமங்களும் மிச்சமாகும். நீதிமன்றங்களின் பணிச்சுமைகளும் பெருமளவுகுறையும். நீதி கிடைப்பதில் ஏற்படும் தாமதமும் குறையும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

5. பாபரிமஸ்ஜித்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டு சுமார் 20ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அப்பள்ளியை இடித்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருப்பது இந்திய முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். ரேபரேலி நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையைத் துரிதப்படுத்தவும் நியாயமான தீர்ப்பு வழங்கவும் இச்செயற்குழு நீதித் துறையைக் கேட்டுக் கொள்கிறது.

பாபர் மசூதி குறித்த அலஹாபாத் நீதிபதிகளின் கட்டப்பஞ்சாயத்து அநியாயத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டை துரிதமாக விசாரித்து முடிக்க மத்திய அரசு முயல வேண்டும் எனவும், உச்ச நீதிமன்றம் ஆறப்போட்டு அநீதியிழைக்காமல் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும்இச்செயற்குழு கோருகிறது.

6. வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைக்கக்கோரி

கிறித்தவ சமுதாயத்தின் அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்ரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின்  வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும், சுரண்டல்  பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துக்களை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃப் வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என மாநில மத்திய அரசுகளை இச்செயற்குழு  கேட்டுக் கொள்கிறது.

உள்ளூர் ஜமாஅத்துகள் வக்பு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

7. முஸ்லிம்தனியார்சட்டம்

பெண்கள் பருவ வயதை அடைந்தவுடன் திருமணத்துக்குத் தயாராகிறார்கள். பருவ வயதை அடைந்து 18 வயதை அடையாத பெண்கள் காதல் வலையில் விழுந்து சீரழிந்து போகிறார்கள். இந்த நிலை ஏற்படாமல் தடுக்க பொறுப்புள்ள சில பெற்றோர்கள் தங்கள் புதல்விகள் 16 வயதை அடைந்தவுடன் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் இது போன்ற திருமணங்களை குழந்தைகள் திருமணம் என்று சொல்லி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பெற்றோர் மீது வழக்கும் பதிவு செய்கிறார்கள். திருமணம் விவாகரத்து உள்ளிட்ட சில சட்டங்களில் முஸ்லிம்களுக்கு தனியாக சட்டம் உள்ளதால் பருவ வயதை அடைந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய முஸ்லிம்களுக்கு சட்டப்படி உரிமை உள்ளது. இந்த உரிமையைப் பறிக்கும் வகையில் செயல்படுவதை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

8. திருமண பதிவுகளில் கெடுபிடி

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென மாநில அரசு சட்டம் இயற்றியது. திருமணத்தைப் பதிவு செய்யப் போகும் போது முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். தற்காலத்தில் முஸ்லிம்கள் திருமணப் பத்திரிக்கை கூட அடிக்காமல் எளிமையாக திருமணம் செய்கிறார்கள். திருமணப் பத்திரிக்கை கொண்டுவர வேண்டுமென அதிகாரிகள் நிர்பந்தம் செய்கின்றனர்.

நமது நாட்டில் ரேஷன் கடைகளில் உள்ள குளறுபடிகளை உலகமே அறியும். பெயரையும் வயதையும் தவறாக எழுதுதல், குடும்ப உறுப்பினர்கள் சிலரது பெயர்களை சேர்க்காமல் விட்டுவிடுதல் போன்ற குறைபாடுகள் ரேஷன் கார்டில் உள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யும் போது ரேஷன் கார்டில் கூறப்பட்டுள்ள தகவலுக்கு மாற்றமாக உள்ளதால் ரேஷன் கார்டில் பெயர் இல்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி திருமணத்தைப் பதிவு செய்ய மறுப்பது.

அதிகமான முஸ்லிம் பெண்கள் ஆரம்ப கல்வியை தாண்டுவதில்லை. ஆரம்ப கல்வி கற்ற சான்றிதழ்களையும் பாதுகாப்பதில்லை. திருமணத்தைப் பதிவு செய்யும் போது கல்வி சான்றிதழ்களையும் கேட்டு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற தேவையற்ற நெருக்கடிகளால் முஸ்லிம் திருமணங்களைப் பதிவு செய்வதை தவிர்ப்பதுதான் இச்சட்டத்தால் கிடைத்த நன்மையாகஉள்ளது. எனவே இச்சட்டம் முழுமையாக பயனளிக்க வேண்டுமானால் முஸ்லிம் நிறுவனங்கள், ஜமாஅத்துகள் முன்னிலையில் பதிவு செய்த திருமணச் சான்றையே ஆதாரமாகக் கொண்டு திருமணத்தைப் பதிவு செய்ய ஆவண செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

9. தேர்தல் முறையில் மாற்றம் தேவை

இந்தியத் தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசனத் திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும்  இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்தத் தேர்தல் முறையினால் மட்டுமே அனைத்து கட்சிகளும் அனைத்து சமுதாயமும் தங்களின் பலத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம் பெறமுடியும். மேலும் கொள்கை முரண்பாடுள்ளவர்களுடன் பொருந்தாக் கூட்டணி வைக்கும் அவலமும் இதனால் ஒழிக்கப்படும் என்று இச்செயற்குழு கருதுகிறது.

10. முஸ்லிம்களுக்கு ரிசர்வு தொகுதி

சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்புகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு தேர்தல் தோறும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே தலித் சமுதாய மக்களுக்கு இருப்பது போல் முஸ்லிம்களுக்கு 20 சதவிகித தொகுதிகளை முஸ்லிம் ரிசர்வ் தொகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

11. இறந்தவர்களை அடக்கம் செய்ய மறுப்போர்

காழ்ப்புணர்வு காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கின்றது.

12. இஸ்லாத்தைத் தழுவியோருக்கானஅரசுவேலைவாய்ப்பு

பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தைத் தழுவினால் அவர்கள் கிறித்தவர்களின் பிற்பட்ட பிரிவினராகக் கருதும் வகையில் அரசாணை உள்ளது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினால் அவர்கள் பிற்பட்ட சமுதாயமாகக் கருதப்படுவார்கள் என்று அரசாணை இல்லாததால் கல்வி வேலை வாய்ப்பில் இவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது குறித்து மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு போட்ட பிறகும் தமிழக அரசு இதுவரை அரசாணை வெளியிடவில்லை. இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் நடராஜ் அவர்களைச் சந்தித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்தனர். பின்னர் இப்பொறுப்புக்கு வந்த நவநீத கிருஷணன் அவர்களையும் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் இன்று வரை இது குறித்து ஆணை பிறப்பிக்கவில்லை. தமிழக அரசின் இந்தப் போக்கை இச்செயற்குழு கண்டிப்பதுடன் உடனடியாக இதற்கு அரசாணை பிறப்பித்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

13. பூரணமதுவிலக்கு

மதுபானங்களும், இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும், கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுப்பாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும், நிம்மதியும், ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்தச்செயற்குழு வற்புறுத்துகிறது.

மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விலக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

14. கோஎஜுகேசன்கல்விமுறைஒழிக்கப்படவேண்டும்.

சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காமப் போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தைச் சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. நமது நாட்டுக் கலாச்சாரத்துக்கு ஒத்து வராத கோஎஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15. வரம்புமீறும் கிறித்தவ கல்வி நிறுவனங்கள்

சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவப் பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லிம்களும் இந்துக்களும் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மத மாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்து செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இசெயற்குழு கேட்டுக் கொள்கிறது.

16. இலங்கையிலும் பர்மாவிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் முறை

இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் நல்லிணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கைஅரசும்மதவெறியர்களுக்குஆதரவாகவேஇருந்துவருகின்றது.

இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனஇச்செயற்குழுகேட்டுக்கொள்கிறது.

முஸ்லிம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் தவ்ஹீத்ஜமாஅத்நிர்வாகிகள் அந்தந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு சர்வதேசநெருக்கடி ஏற்படுத்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லிம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தலாய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.

17. மத்திய அரசின் ஹஜ் மானியக் கொள்ளை

ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லிம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது.

விமானக் கட்டணம், உணவு தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது மேலும் 60 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

18. வளைகுடா பணியாளர் அவலம்

வளைகுடா பணியார்களின் அதிகமானோர் குறைந்த ஊதியத்தில் கடினமான வேலைகளைச் செய்கின்றனர். இவர்களின் ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முயல வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. இந்தியத்தூதரகங்களின் அலட்சியப் போக்கு

அரபு நாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக அனைத்து நாடுகளும் தமது தூதரகங்களில் கனிவான சிறப்பான பொறுப்பான சேவைகளைச் செய்து தங்கள் நாட்டு ஊழியர்களின் நலன்களைப் பாதுகாத்து வருகின்றன. ஆனால் அரபு நாடுகளில் இயங்கும் இந்தியத் தூதரகங்கள் இந்தியத் தொழிலாளர்கள் விஷயத்தில் திமிராகவும், ஆணவத்துடனும், பொறுப்பின்றியும் நடந்து கொள்வதாக எண்ணற்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய நிறுவனங்கள் தொழிலாளர்களை ஏமாற்றினாலும், ஊதியக் குறைப்பு செய்தாலும், காரணமின்றி ஆட்குறைப்பு செய்தாலும், விபத்துக்களில் சிக்கிக் கொண்டாலும், தொழிலாளர் மரணித்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாத கொடுங்கோலர்கள் தான் இந்திய தூதரகங்களில் உள்ளனர். இந்தியத் தொழிலாளர்கள் இந்தியத் தூதரகங்களை அணுகவே அஞ்சுகின்ற அளவுக்கு நிலைமை மோசமாகவுள்ளது. இப்போக்கை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. மத்திய அரசு இதை உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

20. பிறரைத் தாக்கும் ஊர்வலங்களுக்குத் தடை

சிறுபான்மையானாலும், பெரும்பான்மையானாலும் மற்ற மதத்தவரைத் தாக்கிக் கோஷம் போடும் வகையிலும் மற்ற மதத்தவர்களைக் கேவலப்படுத்தும் வகையிலும் நடத்தும் எந்த ஊர்வலத்துக்கும் எக்காலத்திலும் அனுமதி அளிக்கக் கூடாது. இதன் மூலம் மத நல்லிணக்கத்தைப் பேண முடியும் என்று அரசுக்கு இச்செயற்குழு ஆலோசனை கூறுகிறது.

21. கலவர தடுப்பு மசோதா

ஆட்சிக்கு வந்தால் மதக்லவரத் தடுப்பபு சட்டத்தை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் வாக்களித்ததை தாமதமின்றி உடனே நிறைவேற்ற வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

No comments:

Post a Comment