Saturday, September 28, 2013

TNTJ “தபூக்” கிளை வாராந்திர பயான்…!!


அல்லாஹ்வின்பேரருளால் TNTJ ஜித்தாஹ்மண்டலம்" தபூக்" கிளை மர்கஸில் 27/09/2013 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்கசொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!...

இன்நிகழ்ச்சியில்சகோ, {சங்கை}அப்துல்அஜீஸ்  உரையில்"மஹ்ஷரில் மனிதனின் நிலை"!என்றதலைப்பில்: உண்மையான மஹ்ஷர் என்றால் என்ன அது எவ்வாறு
இருக்கும் என்பதை அழகிய முறையில் குர்ஆன்,ஹதீஸ் ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

மேலும்,மேலத்தாணியம் சகோ,நிஜாம் அவர்கள் கடந்தவர உலக நிகழ்வுகள் அனைத்தையும் "நட்டுநடப்பும் நமது நிலையும்" என்றதலைப்பிலும், மேலும்மேலப்பளையம் சகோ,முஹம்மது ரபீக் அவர்கள் "உண்மையான நேர்வழி எது" என்ற தலைப்பிலும் மிகச்சிறப்பாகசிற்றுரையாற்றினார்கள்.
இன்நிகழ்ச்சியில் புதிதாக இஸ்லாத்தை தழுவிய சகோதரர்கள் உள்பட பலர்கலந்துக் கொண்டனர். இறுதியில் நபிவழிதுஆவுடன், நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
 அல்ஹம்துலில்லாஹ்….!!
நாங்கள் முஸ்லிம்கள்:
--------------------------------------
"எவர் அல்லாஹ்வின் பக்கம்  (மக்களை) அழைத்துக் கொண்டு ஸாலிஹான  (நல்ல) செயல்களை செய்து கொண்டு
நிச்சயமாக நான் முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் எனக்கூறுகிறாரோ, அவரைவிட அழகிய சொல் சொல்பவர்
யார்? (உலகப்பொதுமறை41:33)

No comments:

Post a Comment