Monday, October 3, 2011

ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி


அஸ்ஸலாமு அலைக்கும் 
ஏழைகளின் துயர் துடைத்திட கூட்டுக் குர்பானி :

 

இப்ராஹீம் நபியவர்களின் தியாகத்தை நினைவு கூர்வதற்காகவும்,

அவர்களைப் போல் எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார்

என்று உறுதி எடுப்பதற்காகவும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மீது

குர்பானி கொடுப்பது கடமையாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம்.

 

ஏழைகளின் துயர் துடைப்பது குர்பானியின் அடுத்த நோக்கமாக

அமைந்துள்ளது. இதனால் தான்  வறுமை நிலவிய ஆரம்ப காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆணையிட்டிருந்தார்கள். பின்னர் செழிப்பான நிலை ஏற்பட்டபின் இக்கட்டளையைத் திரும்பப் பெற்றார்கள்.

 

ஏழைகளின் துயர் துடைப்பதும் குர்பானியின் நோக்கம் என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

 

ஒரு பக்கம் ஏராளமாக குர்பானி கொடுக்கப்பட்டு வாங்குவோரின்றி மாமிசம்

சீரழிவதையும், இன்னொரு பக்கம் போதிய மாமிசம் கிடைக்காமல் ஏழைகள் திண்டாடுவதையும் நாம் காண்கிறோம்.

இந்த ஏற்றத் தாழ்வை அகற்றி ஏழைகளுக்கு தாராளமாக இறைச்சி கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தாங்கள் வழங்கும் ஆடு மாடுகளை டிஎன்டிஜே தலைமைக்கு வழங்கினால், தேவையான பகுதிகளில் முறையாக வினியோகம் செய்து அதன் கணக்கு விபரத்தை உணர்வில் வெளியிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஆடு மாடுகள் தரத்திற்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்படுவதாலும், ஒவ்வொரு  பகுதியிலும் வெவ்வேறு விலைகளில் விற்கப்படுவதாலும், கடைசி நேரத்தில் விலை ஏற்றப்படுவதாலும் உத்தேசமாகத் தான் இதற்கான தொகையை நிர்ணயிக்க இயலும்.

மாடுகளைப் பொறுத்தவரை இந்த ஆண்டு ஒரு மாடு 7500 முதல் 9000 வரை உள்ளது. அறுத்து வெட்டி கூறுபோட்டு பங்கிடுவதற்கான கூலியும் உள்ளது. எனவே நடுத்தரமான விலையில் 8500 அளவில் மாடு வாங்கி அதற்கான கூலியும் சேர்த்து 9100 வரை ஆகலாம். எனவே முழுமையாக ஒரு மாடு கொடுக்க விரும்புவோர் 9100 அனுப்பி வைக்குமாறும் ஒரு மாட்டில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து கொடுக்க விரும்பினால் ஒரு பங்குக்கு 1300 ரூபாய்கள் அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

 

நடுத்தரமான ஆட்டின் விலை மற்றும் அதற்கான கூலி சேர்த்து 6500 வரை ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏழைகள் வாழும் பகுதி மக்களுக்காக ஒரு ஆடு வழங்க விரும்புவோர் 6500 அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விலை யாவும் உத்தேசமானது தான்.

 

நீங்கள் அனுப்பும் தொகைக்கு ஆடு மாடுகள் வாங்கி ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் வினியோகம் செய்யப்படும். இயன்ற வரை நீங்கள் வழங்கும் தொகைக்கே (கூலியைக் கழித்து) பிராணிகள் வாங்கப்படும். அந்த விலையில் ஆடுமாடுகள் கிடைக்காத பட்சத்தில் அதைவிட சற்றே குறைந்த விலையில் ஆடு மாடுகள் வாங்கப்படும். உங்களால் அனுப்பப்ட்ட 9100 விலையில்

மாடு கிடைக்காமல் 8500க்கு கிடைத்தால் இந்த வகையில் மிச்சமாகும்

தொகை முஸ்லிம் அல்லாத நண்பர்கள் கேட்கும்போது இலவச குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் வகைக்கு மட்டும் பயன்படுத்தப்படும். இதற்கு உடன்படும் அன்பர்கள் குர்பானிக்கான தொகைகளை

அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

 

குர்பானிக்கான டிடி மற்றும் செக் அனுப்புவோர்

UNARVU. A/c No : CA 01000200000698, UCO BANK, CHENNAI என்ற பெயரில் எடுத்து பின் வரும்

முகவரிக்கு மட்டும் அனுப்பவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலத் தலைமையகம்,

எண் 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி, சென்னை - 600001

போன் 044 - 25215226




No comments:

Post a Comment