Wednesday, October 26, 2011

உறுப்பினர் சேர்க்கை


அன்புள்ள வெளிநாட்டு மண்டல தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

இம்மடல் தங்களை பூரண உடல் நலத்துடனும், வீரியமிக்க தவ்ஹீத் சிந்தனையுடனும்  சந்திக்கட்டுமாக!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம் அயல் நாடுகளில் மார்க்க மற்றும் சமுதாயப்பணிகள் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். மாநிலத்தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் அனைத்து மண்டல நிர்வாகிகளுக்கும் நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்முடைய ஜமாஅத் அதிகமான உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொண்ட மாபெரும் இயக்கமாக அல்லாஹ்வின் அருளால் வளர்ந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
 
ஆயினும் நம்முடைய ஜமாஅத்தில் மனதார உறுப்பினர்களாக இணைந்து கொண்ட பலர் முறைப்படி உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெறாமல் உள்ளனர். இன்னும் பலர் நாம் எடுத்துச் சொன்னால் நமது கொள்கையை ஏற்று உறுப்பினராக தம்மை இணைத்துக் கொள்ள தயாராக உள்ளனர், ஆயினும் இதற்காக நாம் முயற்சி எடுக்காததால் எத்தனையோ பேர் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.

எனவே இந்தப் பணியை முடுக்கி விடும் வகையில் நவம்பர் மாதத்தை உறுப்பினர் சேர்க்கை மாதமாக அறிவிப்பது என தீர்மானித்துள்ளோம் நவம்பர் மாதத்தில் உறுப்பினர் சேர்க்கைக்கு கூடுதல் முன்னுரிமை அளித்து செயல்படுமாறும் அதற்காக வழங்கப்படும் அதிகப்புள்ளிகளைப் பெற்று உங்கள் மண்டலத்தை தரம் உயர்த்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். புதிய உறுப்பினர்களைச் சேர்த்தும் பழைய உறுப்பினர்களைப் புதுப்பித்தும் ஒத்துழைப்பு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம்.   

இத்தோடு 6 மாதத்திற்குள் உறுப்பினர்கள் அட்டை காலாவதி  ஆகும் நிலையில் இருந்தால் அவர்களும் இப்போதே ரினீவல் செய்து கொள்ளுமாறு இதன்மூலம் கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: புதிய உறுப்பினர் சேர்க்கைக்கு ஒரு உறுப்பினருக்கு 5 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
இப்படிக்கு..,

ஆர். ரஹ்மத்துல்லாஹ்
(பொதுச்செயலாளர்)




No comments:

Post a Comment