Friday, October 7, 2011

ஆன்லை பயான் ஜித்தா-மதீனா


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 07-10-2011 வெள்ளி அன்று மதியம் 2.45 முதல் 4.30 மணி வரை மாநில தலைவர் சகோ. பி.ஜெ அவர்கள் ஜித்தாஹ் மண்டல மதீனா கிளைக்காக கடல் கடந்தவர்கள் கவனிக்க வேண்டியவைகள் என்ற தலைப்பில் வெளிநாட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய குடும்ப, உலக, மார்க்க விஷயங்கள் பற்றி, மிகவும், அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்கள். மக்களுக்கு மிகவும் அவசியமான இந்த நிகழ்ச்சிக்கு அதிக சகோதரர்கள் தொடர்புகொண்டு தங்களது மகிழ்ச்சியினை தெரிவித்தார்கள், மண்டல கிளைகள் மூலமும் இதனை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதீன கிளையில் சுமார் 50 பேர்கள் கலந்துகொண்டனர், அவர்களுக்கு சிறப்பாக மதிய உணவும் கிளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். உலகம் முழுவதும் சுமார் 800 பேர்கள் கணிணி மூலம் இந்நிகழ்ச்சியினை பார்த்ததாக வெப்மாஸ்டர் மூலம் அறிந்தோம். இலங்கையில், SLTJ FM RADIO மூலம் இதன் நேரலையை ஒலிப்பரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.






No comments:

Post a Comment