Tuesday, October 25, 2011

ஜித்தா மண்டல பெருநாள் விடுமுறை பல்சுவை நிகழ்ச்சி

அல்லாஹ்வின் திருப்பெயரால்.........
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....






அன்புள்ள  சகோதரர்களுக்கு, ஜித்தா மண்டல நிர்வாகிகள் எழுதிக்கொண்டது.

இன்ஷாஅல்லாஹ் வரும் துல்ஹஜ் பிறை 11  (காலண்டர் கணக்கில், தேதி மாறமல் இருந்தால் 07-11-2011 திங்கள் ) அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஜித்தா மண்டலம் சார்பில் ஒரு பல்சுவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் நிகழ்ச்சி நிரலும் இணைத்துள்ளோம். மார்க்க வரம்பிற்க்குட்பட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள், மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சி, பயான் இவைகள் நடைபெறும்

இது பெண்கள் கலந்து கொள்ள வசதியாக அவர்களுக்கு தனியாக ஒரு ஸ்திராஹ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, அவர்களுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் பெண்களே நடத்தும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால் குடும்பத்துடன் எந்தவித தயக்கமும் இன்றி கலந்துகொள்ளலாம். 

ஆண்கள் விளையாட்டு போட்டிகளும், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. க்விஸ் நிகழ்ச்சியில் சகோ. பி.ஜெ அவ்ர்கள் எழுதிய வரும்முன் உறைத்த இஸ்லாம் என்ற புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்க்கப்படும், எனவே, அனைவரும் அதனை படித்து கேள்விகளுக்கு பதில் அளித்து பரிசுகளை வெல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

3 வேளை உணவு, மற்றும் சிற்றுண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைபடுபவர்களுக்கு வாகன வசதியும் செய்யப்பட்டுள்ளது. பெருநாள் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க நீங்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்வதோடு, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை கலந்து கொள்ள சொல்லவும். அன்புடன் அழைக்கின்றது,

ஜித்தா மண்டலம்

No comments:

Post a Comment