Saturday, October 15, 2011

ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்

ஜித்தா மண்டல செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம்.

அல்லாஹ்வின் அருட்கிருபையால் 15.10.2011 அன்று மாலை அஸர் முதல் மஃரிப் வரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை மாதாந்திர கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி "ஸூரத்துல் இக்லாஸின் சிறப்புகள் மற்றும் ஹஜ்ஜின் சிறப்புகள்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

 

புதிதாக இஸ்லாத்தை தழுவிய ராமநாதபுரத்தைச் சார்ந்த சகோ.அமீருக்கு கிளையில் சார்பில் மார்க்க விளக்க புத்தகங்களை மௌலவி பஸீர் முஹம்மது மன்பயி வழங்கினார்கள். அந்த சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தெளிவாக விளக்கப் பட்டது. மிகக்கவனமாக செவியேற்றார்.

தொடர்ந்து ஜித்தா மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் அவர்கள் இரத்ததானம் பற்றியும்,பெருநாளுக்கு மறுநாள் நடக்க இருக்கும் பல்சுவை நிகழ்ச்சி பற்றியும் விளக்கினார்கள். கிளைத்தலைவர் மாநில தலைமையின்அறிக்கைகளை வாசித்தார். கிளையின் இந்த மாத செயல்பாடுகள் பற்றி பேசப்பட்டது. உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். துஆவுடன் நிறைவுற்றது.அல்ஹம்து லில்லாஹ்.

No comments:

Post a Comment