Sunday, October 30, 2011

ஜித்தா - செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம்

அல்லாஹ்வின் அருளால் கடந்த 28.10.2011 வெள்ளி அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல ஜித்தா-செனைய்யா கிளை ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் சகோ.அமீன் தலைமையில் நடைபெற்றது. இதில் வருகிற ஹஜ் பெருநாள் மறுநாள் நடக்க இருக்கிற மார்க்க மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகளில் கிளையின் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும், அதனைத்தொடர்ந்து நடக்க இருக்கும் மண்டல கிளைகள் ஒறுங்கிணைப்பு கூட்டத்தில் நமதுகிளைகளின் செயல்பாடு குறித்து, மண்டதலைமைக்கும், மாநில தலைமைக்கு நமது கருத்துக்கள், ஆலைசனைகள் தெரிவிப்பது குறித்தும் பேசப்பட்டது. அதோடு தாவா பணிகளுக்கு புள்ளிகள் பற்றியும் அவற்றில் நமது கிளையினால் செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் பேசப்பட்டது. ஆன்லைன்மூலம் நடத்தப்படும் பயான் நிகழ்ச்சிகளுக்கு, கேள்விப்பதில் நிகழ்ச்சிகளுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்ற கேள்வியும் எழுந்தது. மாநில தலைமைதான் அதற்கு புள்ளிகள் கொடுக்க வேண்டும். மாநில தலைமையின் பைலாவில் புதிதாக சேர்க்க இருக்கும் விதிமுறைகளை படித்து காண்பிக்கப்பட்டது. ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment