Friday, August 30, 2013

”நேர்மையை விதையுங்கள்.”

"நேர்மையை விதையுங்கள்."

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு  வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின்பொறுப்பை  அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவுசெய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார். உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒருபோட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.
என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள்உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்தவருடம் என்னிடம் காட்ட  வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ  அவரே என்கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார். அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர். அந்த கம்பெனியில் வேலை செய்யும் அன்வர் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும்சொன்னான்.அவன் மனைவி
தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்தவிதையை நடுவதற்க்கு உதவி செய்தாள். ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்துவிட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் அன்வர்ன் தொட்டியில் செடி இன்னும்வளரவே ஆரம்பிக்கவில்லை.
ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனதுஅப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனாஎன்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன்தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை. ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்துவந்தார்கள்.அன்வர் தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்றுசொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள்முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை.நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள்என்றாள்.
அன்வர்ம் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான்விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்தஅனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும்அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்புஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.அன்வர் கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார். அன்வர் தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டேசென்றான்.முதலாளி அன்வர்ம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையைநட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான். முதலாளி அன்வர்வை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு அன்வர் தோளில் கையைபோட்டு கொண்டு  நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான்என்றார்.அன்வர்வுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்தபொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.
சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அதுஅனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்கஇயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒருவிதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.அன்வர் மட்டுமே நேர்மையாக நடந்துகொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை  நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

No comments:

Post a Comment