Wednesday, August 14, 2013

ஜித்தாவில் நல்லொழுக்க பயிற்சி! பெருநாளிலும் மறுமை நன்மைக்கான முயற்சி! 10-08-2013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா  மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான நல்லொழுக்கப் பயிற்சி லக்கி தர்பார் அரங்கில் 10-08-2013 அன்று மண்டல துணைத் தலைவர் ரபீ தலைமையில் தொடங்கியது. இதில் மண்டல மற்றும் நகர கிளைகளின் நிர்வாகிகளுக்கு, அமைப்பு விதிகள், நிர்வாக ஒழுங்குகள், பேச்சு பயிற்சி, தலைமைக்கு கட்டுப்படல், தனிமனித ஒழுக்கங்கள்  என பல்வேறு அறிவுறுத்தல்கள் கருத்துரைக்கப்பட்டு அடக்கத்துடன் அனைவராலும் செவிமடுக்கப்பட்டன. மண்டல துணை செயலாளர் ஷௌகத் ஹுசைன் தொகுப்புரைக்கு பின், மண்டல பொது செயலாளர் அப்துல்பாரி நன்றியுரையாற்றினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

இப்படிக்கு,
ஜித்தா மண்டல நிர்வாகிகள்.



No comments:

Post a Comment