Sunday, November 27, 2011

இந்திய தூதரக அதிகாரி கூட்டத்தில் தபூக் கிளை நிர்வாகிகள்

24/11/2011 வியாழன் அன்று இரவு இந்தியத் தூதரக அதிகாரிகள். தபூக் வாழ் இந்தியர்களுடைய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து கலந்தாலோசிக்க ஒரு முக்கிய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டதிற்கு TNTJ தபூக் கிளை நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இக்கூட்டம் [ I I S T ] மீட்டிங் ஹாலில் திரு S.D. மூர்த்தி [Consul Community Welfare] C G I- Jeddah KSA. அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் TNTJ தபூக் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் TNTJ தபூக் கிளைத் தலைவர் சகோ, அப்துல் அஜீஸ் அவர்கள் தபூகில் பலவித பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் அவலநிலை குறித்தும், இந்தியத் தூதரகத்தின் அலட்சியப்போக்கை குறித்தும் அழகாக எடுத் துரைத்தார். இறுதியில் தபூகில் 7 பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் நமது கிளைத் தலைவர் அப்துல் அஜீஸும் தமிழகம் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்டார். அல் ஹம்து லில்லாஹ்.