Monday, January 30, 2017

ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....

From: Mohammed Maheen <abooafia@gmail.com>
Date: 2017-01-30 11:24 GMT+03:00
Subject: ஜித்தா மண்டலம் 13 வது இரத்ததான முகாம் பத்திரிகைகளில்....


இந்நேரம்.காம்

http://www.inneram.com/news/middle-east/11992-blood-donation-in-jeddah.html

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஜித்தாவில் நடந்த இரத்த தான முகாம்!

 
ஜித்தா(30 ஜன 2017): இந்தியாவின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு 27-01-17 அன்று சவுதி அரேபியாவின் ஜித்தா மாநகரில் சவுதி வாழ் இந்தியர்கள் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

ஜித்தா, மஹ்ஜர் பகுதியிலுள்ள கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டலம் ஏற்பாடு செய்திருந்தது. மதியம் 2:00 மணிக்கு துவங்கிய இம்முகாமில் சுமார் 160க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழர்களால் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் தமிழர்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி போன்ற பிற மாநில சகோதரர்களும் பாகிஸ்தான், இலங்கை உட்பட பல நாட்டினரும் இந்த முகாமில் கலந்து கொண்டு குருதிக் கொடையளித்தனர்.

கிங் அப்துல் அஸீஸ் மருத்துவமனையின் இரத்த வங்கி இயக்குநர் Dr.அய்மன் சப்ரி தலைமையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. மருத்துவமனையின் இரத்ததானக் குழுவினர் மக்களிடமிருந்து இரத்ததானம் பெறுவதற்காக 10 படுக்கைகள் போடப்பட்டு செயல்பட்டனர்.

மதியம் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற்ற இம்முகாமில் கலந்து கொண்ட 160 பேரிடமிருந்து 121 யூனிட் இரத்தம் தானமாக பெறப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வாலண்டியர் குழு தங்களது வாகனங்கள் மூலமாக மக்களை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வருவது அவர்களை திரும்ப அழைத்து செல்வது மக்களுக்கு வழி காட்டுவது போன்ற பணிகளை சிறப்பான செய்திருந்தனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல இரத்ததான பொறுப்பாளர் சலாஹூதீன், இந்த முகாம் பற்றி குறிப்பிடும் போது, இது போன்ற முகாம்கள் மட்டுமின்றி அவசர தேவைக்காக எந்த நேரத்தில் இரத்தம் தேவைப்படினும் அதை நாங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கின்றோம். இது மட்டுமின்றி மருத்துவ உதவிகள், வாழ்வாதார உதவிகள் போன்ற மனிதாபிமான பணிகளை நாங்கள் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறோம் என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஜித்தா மண்டல துணைத்தலைவர் நெய்னா முஹம்மது கூறுகையில், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவது, கருத்தரங்கம் என்ற பெயரில் வெறுமனே கூடிக் கலைவது, தொலைக்காட்சிகளின் முன்னே போஸ் கொடுப்பது போன்றவற்றை தவிர்த்து மக்களுக்கு பயனுள்ள வகையில் இரத்ததான முகாம்களை நடத்தி வருகின்றோம். இந்திய குடியரசு தினம், இந்திய சுதந்திர தினம் போன்ற நாட்களில் மட்டுமின்றி வருடத்திற்கு பலமுறை இதுபோன்ற மாபெரும் முகாம்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வருகின்றது.

ஒரே நாளில் அதிகமானோர் இரத்ததானம் செய்ததில் சவுதி அரேபியாவில் தொடர்ந்து பல வருடங்களாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முதலிடத்தில் இருந்து வருகின்றது. இது ஜித்தா மண்டலம் சார்பாக நடத்தப்பட்ட 13வது முகாமாகும் என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment