Friday, May 31, 2013

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?


கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்பினிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.

No comments:

Post a Comment