Tuesday, September 13, 2011

ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத், மலேஷியா மண்டல நிர்வாகிகளுடன் சந்திப்பு


அல்லாஹ்வின் திருப்பெயரால்,,,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்


 கடந்த 07-09-2011 -புதன் இரவு அன்று, மலேஷியா  சென்றிருந்த 
ஜித்தா மண்டல தலைவர் சகோ. நௌஷாத்,மலேஷியா மண்டல                                 நிர்வாகிகளை சந்தித்தார்கள். மலேஷியா மண்டல பொருளாளர் 
சகோ. அய்யுப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 
இரு மண்டலத்திலும் நடைபெறும் பணிகள் பற்றியும், மாநில நிர்வாகத்திற்க்கு அளித்து வரும் பங்களிப்பு பற்றியும், இனி எவ்வாறு செயல்பாடுகளை அமைத்து கொள்வது எப்படி என்பது பற்றியும்,    உறுப்பினர்களை எப்படி அதிகப்படுத்துவது என்றும், பெண்கள்    தாஃவாவை  எப்படி அமைத்துக் கொள்வது என்றும்,  நிர்வாக   செலவுகள் மற்றும் மாநிலத்திற்க்கு அளிக்கும் பங்களிப்புகளுக்கு   நிதி திரட்டுவது  எப்படி என்பது பற்றியும், விரிவாக 
விவாதிக்கப்பட்டது. இரவு 9.30 மணிக்கு தொடங்கப்பட்ட கூட்டம் 
சுமார் 1 மணிக்கு து. மற்றும் இரவு  உணவுடன் இனிதே 
நிறைவேறியது  அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment