Wednesday, August 24, 2011

செனைய்யா கிளையின் பொதுக்குழு கூட்டம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12.08.2011 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல செனைய்யா கிளையின் பொதுக்குழு ஜித்தா மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் அலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு மண்டல செயலாளர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இதில் கிளைத் தலைவரின் வரவேற்புரைக்கு பிறகு சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள்
நோன்பினால் நாம் பெரும் பயன் என்ன?
என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.





தொடர்ந்து மண்டல தலைவர், கிளையின் காலியாக இருந்த பொருளாளர் பொறுப்பிற்கும், இரண்டு துணைச் செயலாளர் பொறுப்பிற்கும் வாக்கெடுப்பு மூலம் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார்கள். புதிதாக இஸ்லாத்தை தழுவிய இலங்கையை சார்ந்த சகோ.பௌஸானுக்கு சகோ.பி.ஜெயினுலாபிதீன் தமிழில் மொழிபெயர்த்த திருக்குர்ஆனை சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள் இலவசமாக வழங்கினார்கள்.




மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் ஜித்தமண்டல இஃப்தார் மற்றும் ஃபித்ரா அறிவிப்புக்கள் செய்தார்கள். இந்த பொதுக்குழுவில் இஃப்தார்க்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.



இந்த நிகழ்ச்சிக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள். இதற்கு நிர்வாகிகள் பெரும் ஒத்துழைப்பு செய்தார்கள். பல புதிய உறுப்பினர்கள் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு வந்து ஆர்வமுடன் சேர்ந்து கொண்டார்கள். மகரிப் தொழுகைக்குப் பிறகு இனிதே நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ். 



No comments:

Post a Comment