Saturday, May 4, 2019

ஜித்தா மண்டல செயற்குழு

மண்டல ஆலோசனைக் கூட்டம்

02/05/2019 வியாழன்று இரவு மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆரம்பமாக, 
பஷீர் மௌலவி அவர்கள் "சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் ரமலான்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இரண்டாவதாக,
மண்டல தலைவர் சகோ.முனாஃப் அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இப்தார் நிகழ்ச்சிகள் நடத்துவது, ஃபித்ரா வசூல் செய்வது போன்ற பணிகளுக்காக கலந்து கொண்டவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.

நன்மைகளை பன்மடங்காக அள்ளித்தரும் இந்த ரமலானில் பொருளாதாரத்தை அதிகமாக திரட்டி நற்பணிகளில் ஈடுபடுவதோடு தேவைப்படும் மக்களுக்கு அதை வழங்க வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் இந்த ரமலானில் அதிகமான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment