Saturday, September 12, 2009

ஜித்தாவில் நடைபெற்ற இஃப்தார் விருந்து

கடந்த 11-9-2009 அன்று வெள்ளிக் கிழமை மாலை 5-30 முதல் இரவு 8-30 வரை இரண்டு அமர்வாக இஃப்தார் மற்றும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜித்தா மண்டல தாஃயி சகோ.சௌகத் ஹூஸைன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முதல் அமர்வில் சகோ. பஸீர் மௌலவி அவர்கள் ”அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்”’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

துஆ, இஃப்தார் மற்றும் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இரண்டாம் அமர்வில் சகோ. பிர்னாஸ் மௌலவி அவர்கள் ”’நோன்பின் நோக்கம் இறையச்சம் ஒன்றே”’ என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஜித்தாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் வந்து 600 க்கும் மேற்ப்பட்டோர்கள் கலந்து கொண்டார்கள். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.

இறுதியாக சகோ.முகையதீன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறையுற்றது.

நிகழ்ச்சி நிறைவுற்ற பின் சகோ.பி.ஜெயினுலாபிதீன் அவர்கள் எழுதிய திருமறையின் தோற்றுவாய் என்ற தலைப்பிலான புத்தகம் இலவசமாக கொடுக்கப் பட்டது. TNTJ ரியாத் மண்டலம் புத்தகம் அனுப்பி உதவியது.



No comments:

Post a Comment