Pages

Wednesday, November 14, 2012

ஜித்தா-செனைய்யா கிளையில் தனிநபர் தாஃவா

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஜித்தாவில் செனைய்யா பகுதியில் வேலை செய்துவரும் ராமநாதபுரம் மாவட்டம், கோடிக்களம் கிராமத்தை சேர்ந்த சகோ.ரவிச்சந்திரன் கடந்த வாரம் தூயமார்க்கமான இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டு முஹம்மது ரஃபீக் என்று பெயர் மாற்றிக்கொண்ட விபரத்தை அறிந்த ஜித்தா மண்டலம் செனைய்யா கிளை நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகளுடன் சென்று அவரை சந்தித்து, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்க்கு தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டதோடு, அவருக்கு இஸ்லாம் என்ற பெயரில் உள்ள தவறான விஷயங்களை எடுத்துரைத்து, ஓரிரு கொள்கைகளை விளக்கியதோடு, ஒரு தமிழ் தர்ஜுமா குர் ஆனையும், ஐந்து இஸ்லாமிய புத்தகங்களையும் அளித்து வந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment