Pages

Saturday, October 27, 2012

ஜித்தா - தபூக் கிளையில் ஈத் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை  மர்கஸில்  26/10/2012 வெள்ளி ன்று இஷாவிற்கு பிறகு ஹஜ் பெருநாள்  சந்திப்பு  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தபூக் மற்றும் புறநகர் பகுதிகளிள் பணிபுரியும்  இந்திய இலங்கை, முஸ்லீம்கள், மற்றும் பிற சமய சகோதரர்கள் கலந்துகொண்டனர். இதில் துவக்க உரையாற்றிய கிளைச் செயளாலர் சகோ.நிஜாம் அவர்கள், வந்திருந்த அனைத்து தரப்பு மக்களையும் வரவேற்று "அல்லாஹ்வை பெருமைப் படுத்தப்படவேண்டிய பெருநாட்கள்" என்ற ஒரு தலைப்பில் உரையற்றினார்கள். அடுத்து, பேசிய கிளைத் தலைவர் சகோஅப்துல் அஜீஸ் அவர்கள்: "நபிகள் நாயகம்  (ஸல்) அவர்களின் இறுதி பேருரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
மேலும், கலந்து கொண்ட இருபாளருக்கும் "இனிய மார்க்கம், எளிய மார்க்கம்" கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அனைத்து தரப்பு கேள்விகளுக்கும் அழகிய முறையில் பதில் அளித்தார்கள். இறுதியாக கிளை  பொருளாலர்  சகோ. முஜாஹீத்  அவர்கள் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறமத சகோதரர்கள் அனைவருக்கும் சகோ. P.J  அவர்களின் தமிழாக்கம்,  திருமறைதோற்றுவாய்,  மாமனிதர்  நபிகள்  நாயகம்,  வருமுன்  உரைத்த இஸ்லாம், மனிதனுக்கேற்ற  மார்க்கம்   இஸ்லாம்,  பைபில் இறைவேதமா?,  இயேசு இறைமகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை நபிவழித் தொழுகை மற்றும் பல இஸ்லாமிய 15 நுல்களையும். மேலும்  இஸ்லாம்  ஓர் இனியமார்க்கம், நாத்திகர்களுடன் நடந்த விவாதம், கிருஸ்தவர்களுடன் நடந்தவிவாதம்பைபில் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா? விவாதம்!,  இஸ்லாத்தின் தனிச்சிறப்புகள்,ஆகிய தலைப்புகளின் 25 DVD களையும் இலவசமாம வழங்கப்பட்டது. து.ஆ மற்றும் இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment