Pages

Sunday, September 2, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளையில் பிலிப்பைன்ஸ் சகோதரிகளின் பெருநாள் சந்திப்பு

அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம்  தபூக்  கிளையில் கடந்த  31/08/2012  வெள்ளி அன்று அஸருக்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் இல்லத்தில் அவரின் மனைவி சகோதரி சுமையாவின் தலைமையில்  ஈத் பெருநாள்  சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தபூக் நகரில் பணிபுரியும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சமிபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய ஏராளமான சகோதரிகள் கலந்து கொண்டனர். கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்களின் மனைவி சகோதரி சுமையாஹ் அவர்களின் துவக்க உரையுடன் கலந்துரையாடல் மற்றும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment