Pages

Saturday, August 11, 2012

ஜித்தா மண்டல இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10-08-2012 வெள்ளி அன்று ஜித்தா மண்டல ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் நிகழ்ச்சி ஜித்தா கிலோ-14 தாஃவா செண்டர் வளாகத்தில் நடைபெற்றது. இதன் முதல் அமர்வில் மௌலவி முஹம்மது உவைஸ் உள்ளத்தை உருக்கும் தியாகங்களும் உணர மறுக்கும் சமுதாயமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்பு சிறுவர்கள் நிகழ்ச்சியில் நேரம்,ஜக்காத், தொழுகை பற்றி புரஜெக்டர் ஒளிபரப்புடன் சிறு உரை நிகழ்த்தினார்கள். பின் இஃப்தார் நடைபெற்றது. மஃரிபிற்க்கு பிறகு இரண்டம் அமர்வில் மௌலவி இத்ரீஸ் 6 நோன்புகளின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியை சகோ. சௌக்கத் ஹுசைன் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுக்கோட்டையை சேர்ந்த மாற்றுமத சகோதரர் ராஜாவிற்க்கு சகோ.பி.ஜெ மொழிபெயர்த்த தமிழ் குர்ஆன் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு உணவு விநியோகத்திற்க்குப்பின் து.ஆ வுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment