Pages

Thursday, August 23, 2012

ஜித்தா-ஜிஸான் கிளையில் ஆன்லைன் பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-08-2012 அன்று ஜித்தா மண்டலம் ஜிஸான் கிளையில் பெருநாள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிளை அமைப்பாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள் முன்னிலையில், கிளை செயலாளர் சகோ. ரியாஜ் அஹமது அவர்கள் துவக்க உரையுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து ஆன்லைன் மூலம் சகோ.சையது இப்ராஹிம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஜித்தா மண்டல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். சுமார் 60 பேர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வரும் முன் உரைத்த இஸ்லாம் புத்தகம் (60 புத்தகங்கள்) வழங்கப்பட்டது. மேலும், தவ்ஹீத் ஜமாத்தில் ஏன் இருக்க வேண்டும் என்ற தலைப்பிலும் மற்றும் பல தலைப்புகளிலான சி.டிக்கள் 200 இலவசமாக விநியோகிக்கப்பட்டது. மண்டல தலைவர் சகோ. நௌஷாத் மற்றும் மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி மாநில மண்டல செயல்பாடுகள் பற்றி உரையாற்றினார்கள். இரவு உணவிற்க்குப்பின் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment