Pages

Saturday, July 14, 2012

TNTJ ஜித்தா-தபூக் கிளை வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் TNTJ ஜித்தாஹ் மண்டலம் தபூக் கிளை மர்கஸில் 13/07/2012 வெள்ளி அன்று  ஜூம்ஆவிற்கு பிறகு வாராந்திர மார்க்க சொற்பொழிவு மிகச்சிறப்பாக நடைபெற்றதுஇந்நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் சகோ. அப்துல் அஜீஸ் அவர்கள் "நோன்பின் மாண்புகள்" என்ற தலைப்பில், நோன்பை கடமையாக்கிய அல்லாஹ்வின் நோக்கத்தை அழகான முறையில் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துரைத்தார்கள்.    
மேலும் கிளைச் செயலாளர் சகோ. நிஜாம் அவர்கள் "நோன்பும், இறையச்சமும்" என்ற தலைப்பிலும், கிளை பொருளாளர் சகோ. முஜாஹீத் அவர்கள் "உண்ணா நோன்பு" என்ற தலைப்பிலும், சகோ. முஹம்மது சாலிஹ் அவர்கள் "ரமலானை அழகிய முறையில் வரவேற்போம்" என்ற தலைப்பிலும், து.செயளாலர் சகோ. உமர் மாலீக் அவர்கள் "புனிதரமலானும், புரியாதமுஸ்லீம்களும்என்ற தலைப்பிலும் சிற்றுரையற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பிறமத சகோதரர்கள் உள்பட 45 திற்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்துகொண்டனர். துஆவுடன், மதிய உணவிற்கு பின் நிகழ்ச்சி நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ். 

No comments:

Post a Comment